Saturday, May 21, 2011

என் பிள்ளைகள் என்ன செய்யும்?




கோலி குண்டு , கில்லி,
இலந்தை பழம் தேடல்,
நெல்லிக்கனி திருட்டு,
பனைமரம் ஏறுதல்,
நிமிட கணக்காய் கிணற்று நீரில் மூழ்கி இருத்தல்,
பொன்வண்டு பிடித்தல்,
கிளி வளர்த்தல்,
ஆடுகளுடன் அன்பு பகிர்தல்,
நாய்க் குட்டிகள் திருடல்,
தட்டாம்பூச்சி பிடித்தல்,
பூக்களில் தேன் உறிஞ்சுதல்,
காக்கை கூடு அழித்தல்,
கண்ணாமூச்சி ஆடுதல்,
தேன் கூடு அழித்தல்
...இப்படியாக
இனிய தருணங்கள்....
எத்தனையோ என்னால் பதிவு செய்யபடவில்லை...
என் பிள்ளைகளுக்கு,
பதிவு செய்ய எத்தனையோ வழிகள் ...ஆனால்
பதிவதற்குரிய இனிய தருணங்கள்... ?!

எல்லோருக்கும் எச்சரிக்கை!!!





நிலா இங்கே வா வா !
என் அம்மாவிற்கு அடுத்து
அதிகமாய் நேசித்தது இவளைதான்.
இவள் பார்வையின் குளிர்ச்சியை போர்த்திக்கொண்டு
கண்ணுறங்கிய நாட்கள் எண்ணிலடங்காதவை...
என் முதல் காதலி,
என்னை முத்தமிட வருகிறாள்
இம்மாதத்தில்.
எங்கள் சந்திப்பில்
இந்த பூமி வெப்பமடையலாம், ஆதலால்
எல்லோருக்கும் எச்சரிக்கை!!!