Friday, October 17, 2008

ஜெயலலிதா வின் புது அவதாரம்

அம்மா என்றால் அன்பு என்றறிந்த
தமிழனுக்கு ...
அம்மா என்றால் இனி நான்தான் என்று ஆணையிட்டவள்...
கற்புகரசியாம் கண்ணகியை அறியாத
இவளுக்கு புணை பெயர்கள் ...
காவேரி தாயாம் ...
கன்னி தாயாம்...
மக்கள் பிரச்சனைகளால் நொந்திருக்க -கோடை
மலையில் நோகாதிருந்தவள்...
தற்போது
தமிழகத்தின் "ராஜபக்சே "
இவள்தான்.
தமிழ் ஈழம் மலர
தம்பி பிரபாகரனுக்கு
புரட்சி ஒன்றே வழி என்றுரைத்து
பொன்னும் பொருளும் வழங்கிய
பொன்மன செம்மலின் வாரிசாம் இவள் (?) ...
தமிழனை எப்போதும்
தன் காலில் விழ செய்யும் இவள் ...
தமிழனை காவு வாங்க ,
இலங்கை அரசுக்கும் துணை நிற்கிறாள்.
தமிழினமே ....
இவள் "கன்னடகாரி" யாக தன்னை நினைக்கையில் ...நீ மறக்கலாமோ?

தமிழனுக்கு ஒரு கவிதை

தமிழனுக்கு தமிழன் என்பார்
தமிழ் பெயர் சூட்ட சொல்லி
தண்டவாளத்தில் தலையும் கொடுப்பார்
தன் மரணம் வரை ,
தமிழனுக்கு உழைப்பேன் என்று
தமிழர்களை மடையர்களாக்கி
தவறாமல் மத்தியில் ஆட்சி செய்வார்.
தனக்கே உரிய 'நரி' தனத்தால்
தரைவழி,தகவல் தொழில் துறையெல்லாம் கேட்டு பெறுவார்.
அரசியல் பொழுது போக்க ,
புலிகளுக்கு இரங்கல் கவி எழுதி "கலகம்" செய்வார்.அதே வேளை ,
புலிகளை முழுதாக ஆதரிப்போர் மீது (nedumaran)
புழுதி தூற்றுவார்.
கொல்லை புறத்தில் கூட்டம் சேர்த்து-புலிகளை
தாம் ஆதரித்தது பற்றி "புலன்காங்கிதம்" கொள்வார் .அவர்கள்
வாழ்வுக்கொரு விடியல் தேடார்.
தன் மகளுக்கு முடி சூட்ட "மன்மோகனை " நிர்பந்திப்பார் ...
தமிழ் ஈழ மக்களுக்கு வாழ்வு தர
தவறாமல் கடிதம் mattum வரைவார் ,
தந்தி அனுப்ப தமிழர்களுக்கு உத்தரவிடுவார்,
தாம்பரத்தை தாண்டவேண்டும் மனித சங்கிலி என்பார்
தம் எம் பி க்களின் ஆதரவை மீட்டுக்கொள்வதை
தந்திரமாய் தள்ளி வைப்பார்.
கவிதையில் வல்லவராம் இவர்...
கதை வசனத்தில் வல்லவராம் இவர்...அரசியல்
நாடகத்தில் தேர்ந்தவராம் இவர் ....உலக
தமிழர்க்கு தலைவராம் இவர்...
ஏய் தமிழா ...
"மக்கள் நலம் மக்கள் நலம் என்பார் -அவர் தம்
மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்வார்."
நீ
ஈனங்கெட்ட பிறவியாக (?)
இனியும் இருக்காதே .

Saturday, September 20, 2008

கலைஞருக்கு ஒரு கவிதை

கலைஞரின் பதவி வெறி
------------------
அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
நாவலருக்குத் துரோகம் புரிந்து
குறுக்கு வழியில் கோட்டை அடைந்து
ஏணியாக இருந்து ஏற்றம்பெற உதவிய
எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து
பிற்படுத்தபட்டவநேன்று பெருமை பீத்தி -ஊழலால்
அவ்வினத்தை சிறுமை படுத்தி
அவா'ளுக்கும் இவா'ளுக்கும் கவிதை புனைந்து
அறிக்கையில் அரசியல் நடத்தி -தமிழனின்
ஆக்கப்பூர்வ மூளையை மழுப்பி
தில்லியைத் திருப்திப்படுத்த
கச்ச தீவு ,காவேரி ,முல்லை பெரியாறு , ஒக்கேனகல் , தமிழ் ஈழம் ,...என்று
புறமுதுகிட்டு ஓடும் தமிழின (தலைவரே?) துரோகியே !
நில மிரட்டல் ,அரிசி கடத்தல் ,மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளை, என்று
உன் பிள்ளைகளால் மட்டுமின்றி -கழக
உடன்பிறப்புகளாலும்
தங்க தமிழ் நாட்டை சுடு காடாய் மாற்றும்
இருபத்தைந்து வருடங்களாய் தமிழ் நாட்டை பிடித்த கலியுக அரக்கனே !
நாய்கள் மட்டுமல்ல பேய்களும் சிரிக்குமைய்யயா ....-உன்
பதவி ஆசை கண்டு .