அம்மா என்றால் அன்பு என்றறிந்த
தமிழனுக்கு ...
அம்மா என்றால் இனி நான்தான் என்று ஆணையிட்டவள்...
கற்புகரசியாம் கண்ணகியை அறியாத
இவளுக்கு புணை பெயர்கள் ...
காவேரி தாயாம் ...
கன்னி தாயாம்...
மக்கள் பிரச்சனைகளால் நொந்திருக்க -கோடை
மலையில் நோகாதிருந்தவள்...
தற்போது
தமிழகத்தின் "ராஜபக்சே "
இவள்தான்.
தமிழ் ஈழம் மலர
தம்பி பிரபாகரனுக்கு
புரட்சி ஒன்றே வழி என்றுரைத்து
பொன்னும் பொருளும் வழங்கிய
பொன்மன செம்மலின் வாரிசாம் இவள் (?) ...
தமிழனை எப்போதும்
தன் காலில் விழ செய்யும் இவள் ...
தமிழனை காவு வாங்க ,
இலங்கை அரசுக்கும் துணை நிற்கிறாள்.
தமிழினமே ....
இவள் "கன்னடகாரி" யாக தன்னை நினைக்கையில் ...நீ மறக்கலாமோ?
No comments:
Post a Comment