Friday, October 17, 2008

ஜெயலலிதா வின் புது அவதாரம்

அம்மா என்றால் அன்பு என்றறிந்த
தமிழனுக்கு ...
அம்மா என்றால் இனி நான்தான் என்று ஆணையிட்டவள்...
கற்புகரசியாம் கண்ணகியை அறியாத
இவளுக்கு புணை பெயர்கள் ...
காவேரி தாயாம் ...
கன்னி தாயாம்...
மக்கள் பிரச்சனைகளால் நொந்திருக்க -கோடை
மலையில் நோகாதிருந்தவள்...
தற்போது
தமிழகத்தின் "ராஜபக்சே "
இவள்தான்.
தமிழ் ஈழம் மலர
தம்பி பிரபாகரனுக்கு
புரட்சி ஒன்றே வழி என்றுரைத்து
பொன்னும் பொருளும் வழங்கிய
பொன்மன செம்மலின் வாரிசாம் இவள் (?) ...
தமிழனை எப்போதும்
தன் காலில் விழ செய்யும் இவள் ...
தமிழனை காவு வாங்க ,
இலங்கை அரசுக்கும் துணை நிற்கிறாள்.
தமிழினமே ....
இவள் "கன்னடகாரி" யாக தன்னை நினைக்கையில் ...நீ மறக்கலாமோ?

No comments: