தமிழனுக்கு தமிழன் என்பார்
தமிழ் பெயர் சூட்ட சொல்லி
தண்டவாளத்தில் தலையும் கொடுப்பார்
தன் மரணம் வரை ,
தமிழனுக்கு உழைப்பேன் என்று
தமிழர்களை மடையர்களாக்கி
தவறாமல் மத்தியில் ஆட்சி செய்வார்.
தனக்கே உரிய 'நரி' தனத்தால்
தரைவழி,தகவல் தொழில் துறையெல்லாம் கேட்டு பெறுவார்.
அரசியல் பொழுது போக்க ,
புலிகளுக்கு இரங்கல் கவி எழுதி "கலகம்" செய்வார்.அதே வேளை ,
புலிகளை முழுதாக ஆதரிப்போர் மீது (nedumaran)
புழுதி தூற்றுவார்.
கொல்லை புறத்தில் கூட்டம் சேர்த்து-புலிகளை
தாம் ஆதரித்தது பற்றி "புலன்காங்கிதம்" கொள்வார் .அவர்கள்
வாழ்வுக்கொரு விடியல் தேடார்.
தன் மகளுக்கு முடி சூட்ட "மன்மோகனை " நிர்பந்திப்பார் ...
தமிழ் ஈழ மக்களுக்கு வாழ்வு தர
தவறாமல் கடிதம் mattum வரைவார் ,
தந்தி அனுப்ப தமிழர்களுக்கு உத்தரவிடுவார்,
தாம்பரத்தை தாண்டவேண்டும் மனித சங்கிலி என்பார்
தம் எம் பி க்களின் ஆதரவை மீட்டுக்கொள்வதை
தந்திரமாய் தள்ளி வைப்பார்.
கவிதையில் வல்லவராம் இவர்...
கதை வசனத்தில் வல்லவராம் இவர்...அரசியல்
நாடகத்தில் தேர்ந்தவராம் இவர் ....உலக
தமிழர்க்கு தலைவராம் இவர்...
ஏய் தமிழா ...
"மக்கள் நலம் மக்கள் நலம் என்பார் -அவர் தம்
மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்வார்."
நீ
ஈனங்கெட்ட பிறவியாக (?)
இனியும் இருக்காதே .
1 comment:
Simply Superb
Post a Comment